Showing posts with label மெட்ராஸ் கஃபே. Show all posts
Showing posts with label மெட்ராஸ் கஃபே. Show all posts

Friday, August 23, 2013

திரையரங்கு நன்றி -வைகோ

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து
“மெட்ராஸ் கஃபே” திரைப்படத்தை திரையிடாததற்கு நன்றி!
#வைகோ அறிக்கை

தமிழ் இனப்படுகொலை செய்த கூட்டுக்குற்றவாளிகள் தங்கள் தரப்பை நியா யப்படுத்திக் கொள்ள சிங்கள பேரினவாத அரசின் பேருதவியுடன் தமிழர் களை பயங்கரவாதிகளாக சித்தரித்து எடுக்கப்பட்ட “மெட்ராஸ் கஃபே” திரைப்படம் வெளியிடக்கூடாது என கொந்தளிக்கும் உணர்வுடன் விடுத்த வேண்டு கோளை ஏற்று இன்று (23.08.2013) வெளியிடுவதாக இருந்த திரைப் படம் திரை யிடப்படவில்லை.

Thursday, August 22, 2013

மெட்ராஸ் கபே -கோவை

கோவையில் "மெட்ராஸ் கபே' திரைப்படத்தை வெளியிடும் திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என #மதிமுக அறிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநகர மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன் குமார் வெளியிட்ட அறிக்கை:

Wednesday, August 21, 2013

மெட்ராஸ் கபே ஈரோடில் எதிர்ப்பு

மெட்ராஸ் கபே திரைப்படத்துக்கு தடை விதிக்க வலியுறுத்தி தமிழீழ ஆதரவு கூட்டியகத்தினர் சார்பாக மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி ஆகியோரிடம் நேற்று (20.08.13) காலை மனு அளித்தனர்.இந்த கூட்டியகத்தில் உள்ள 14 அமைப்புகள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் தெரிவித்தது...

மெட்ராஸ் கபே என்ற திரைப்படத்தில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை தீவிரவாத இயக்கமாக சித்தரித்தும், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை கொச்சைப்படுத்தியும் காட்சிகளை வடிவமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Monday, August 19, 2013

மெட்ராஸ் கஃபே தடை செய்க

மெட்ராஸ் கஃபே திரைப்படத்தைத் தடை செய்க;
திரை அரங்குகளில் முற்றுகை!

#வைகோ அறிக்கை!

தமிழ் இனத்துக்கு மிகவும் துன்பமான காலம் நம்மைக் கடந்து செல்லும் நாள் கள். ஒன்றன்பின் ஒன்றாக, தமிழர் நெஞ்சில் சூட்டுக்கோலைத் திணிக்கும் நிகழ்வுகள் தொடர்கின்றன. நினைத்தாலே மனதை நடுங்கச் செய்யும் படு கொலை களை, குறிப்பாக இலட்சக்கணக்கான யூதர்களை,கொடூரமாகஅழித்த மாபாதகச் செயலை, ஜெர்மானிய ஹிட்லர் நாஜிப்படைகளைக் கொண்டு நடத்தியதற்குப் பின்னர், மனிதப் பேரழிவுகளுள் ஒன்றாக, ஈழத்தமிழர் படு கொலை யை, சிங்களக் கொடியவன் ராஜபக்சே அரசு செய்தது.