Showing posts with label மணல் கொள்ளை. Show all posts
Showing posts with label மணல் கொள்ளை. Show all posts

Thursday, August 15, 2013

மணல் கொள்ளை போவதைத் தடுப்பீர்!

கடற்கரை மணல் செல்வம் கொள்ளை போவதைத் தடுப்பீர்! 

#வைகோ கோரிக்கை

தென்தமிழகத்தின் கடலோரங்களில் இருக்கின்ற, கனிம வளம் பொருந்திய கடற்கரை மணல், அதன் கெட்டித் தன்மையால், கடலோரப் பகுதிகளில் ஒரு தடுப்பு அணையாக, கடல் நீர் உட்புகாத வண்ணம் அப்பகுதி மக்களைக் காத்து வந்தது.

அந்த மணலை அள்ளுவதற்கு அரசு அனுமதி அளித்தது. ஆனால், அனுமதிக் கப்பட்ட அளவைவிட முறைகேடாக, தங்கு தடையின்றி மணல் அள்ளியதைத் தொடர்ந்து, தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பதற்காக அந்தப் பகுதி மக்கள் போராடி வருகிறார்கள்.