நாட்டு விடுதலைக்கு முன்பே விடுதலை பெற்ற இந்தியா பற்றி கனவு கண்டு, “ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று” கூத்தாடி மகிழ்ச்சிக் கடலில் மிதந்தார் பாரதியார்!
ஆனால், இந்த நிலையில் இருந்து ராஜாஜி முற்றிலும் மாறுபட்டவராக இருந் தார். அப்போது வேலூர் சிறையில் விடுதலைப்போரில் ஈடுபட்டதற்காக தண் டனை அனுபவித்துக் கொண்டு இருந்தார். “சுயராஜ்யம் கிடைத்ததும், அது சிறந்த அரசையும், நிறைந்த மகிழ்ச்சியையும் உடனே மக்களுக்குத் தந்து விடாது. தேர்தல் ஒழுங்கீனம், ஊழல், அநீதி, பணபலத்தின் கொடுங் கோன்மை, நிர்வாகத் திறமையின்மை ஆகியவை மூலம் மக்கள் வாழ்க்கை நரகமாகும். முன்பு இருந்த வெள்ளையர் ஆட்சியே மேலானது என்று மக்கள் நினைக்கும் நிலை வரும்.
ஆனால், இந்த நிலையில் இருந்து ராஜாஜி முற்றிலும் மாறுபட்டவராக இருந் தார். அப்போது வேலூர் சிறையில் விடுதலைப்போரில் ஈடுபட்டதற்காக தண் டனை அனுபவித்துக் கொண்டு இருந்தார். “சுயராஜ்யம் கிடைத்ததும், அது சிறந்த அரசையும், நிறைந்த மகிழ்ச்சியையும் உடனே மக்களுக்குத் தந்து விடாது. தேர்தல் ஒழுங்கீனம், ஊழல், அநீதி, பணபலத்தின் கொடுங் கோன்மை, நிர்வாகத் திறமையின்மை ஆகியவை மூலம் மக்கள் வாழ்க்கை நரகமாகும். முன்பு இருந்த வெள்ளையர் ஆட்சியே மேலானது என்று மக்கள் நினைக்கும் நிலை வரும்.