பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்!
வைகோ அறிக்கை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாகக் காரணம் காட்டி, பெட்ரோல் விலை ரூ 1.90, டீசல் விலை 56 காசு என மத்திய அரசு விலை உயர்த்தியுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004 இல் பதவி ஏற்றபோது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 37.84 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ 26.28 ஆகவும் இருந்தது.
கடந்த எட்டு ஆண்டுகளில் இவை 120 சதவிகிதம் அதிகரித்து இருக்கின்றது. ஒவ்வொரு முறையும் பெட்ரோல் டீசல் விலைஉயர்வுக்குக் கச்சா எண்ணெய் விலை ஏற்றம்தான் காரணம் என்பதை ஏற்க முடியாது. ஏனெனில், இந்தியாவைவிட மற்ற நாடுகளில் பெட்ரோல் விலை குறைவாக உள்ளது. பெட்ரோல் விலையை பொருத்தமட்டில் இந்தியாவை விட சீனாவில் 50 சதவிகிதமும், பாகிஸ்தானில் 48 சதவிகிதமும், வங்கதேசத்தில் 58 சதவிகிதமும், மலேசியாவில் 68 சதவிகிதமும், அமெரிக்காவில் 47 சதவிகிதமும், வியட்நாமில் 49 சதவிகிதமும், நியூசிலாந்தில் 29 சதவிகிதமும் இந்திய விலையைக் காட்டிலும் குறைவாக உள்ளது.