Showing posts with label பெங்களூர். Show all posts
Showing posts with label பெங்களூர். Show all posts

Monday, November 25, 2013

பெங்களூர் தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் வைகோ

பொங்கு தமிழ் இயக்கம் சார்பில் இனமான தமிழர் நினைவேந்தல் நிகழ்ச்சி பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் நேற்று (24.11.13 ) மாலையில் நடைபெற்றது. இதில், கலந் து கொண்ட #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ, குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் பேசியதாவது:–

பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசு வ தை பெருமையாக நினைக்கிறேன். அரசியலுக்கு அப்பாற்பட்டது தான் தமிழ்ச் சங்கங்கள்.தமிழ்நாட்டில் கூட செய்யாத சில நல்ல காரியங்களை பெங்களூர் தமிழ்ச் சங்கம் செய்துள்ளது. 

ஈழத் தமிழர்களுக்காகவும், தமிழுக்காகவும் ஏராளமான போராட்டங்களை நடத் தி உள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றுபடுத்தி இருக்கிறது. இதுபோல உலக நாடுகள் முழுவதும் தமிழ்ச் சங்கங்களை நிறுவ வேண்டும். உலக தமிழர்கள் ஒன்றுபட வேண்டும்.

Monday, May 13, 2013

தமிழருக்கு இருள் சூழ்ந்த நேரம்! இதுவே நேர்த்தியான நேரம்!

கர்நாடகத் தமிழ் மக்கள் இயக்கத்தின் சார்பில், பெங்களூரில் 18.10.2009 அன்று நடைபெற்ற, ‘தமிழ் ஈழ விடுதலை ஆதரவு’ மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்புரை
ஆற்றினார், கழகப் பொதுச் செயலாளர் வைகோ. அவரது உரையில் இருந்து...

கர்நாடகத் தமிழ் மக்கள் இயக்கம் முன்னெடுத்து நடத்துகின்ற இந்த மாநாட் டில், இந்தப் பரந்த மைதானத்தில், எரிமலையின் சீற்றத்தை நெஞ்சிலே தேக்கி யவாறு நீங்கள் அமர்ந்து இருக்கிறீர்கள். உணர்ச்சி ததும்புகிற இந்த மாநாட் டில், பல்லாயிரக்கணக்கிலே திரண்டு இருக்கின்றீர்கள். உங்களுக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன்.

ஈழத்திலே நமது சொந்த உறவுகள், குற்றுயிரும் குலையுயிருமாக வதைபடு கின்ற நேரத்தில், மனித நேயத்தோடு, அந்தக் கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று உங்களோடு சேர்ந்து குரல் கொடுத்த கன்னட சகோதரர் களுக் கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.