சங்கொலி தலையங்கம்
“என் வாழ்நாள் முழுவதும் ஆப்பிரிக்க மக்களின் போராட்டத்திற்காகவே என் னை அர்ப்பணித்து இருக்கிறேன். வெள்ளை ஆதிக்கத்துக்கு எதிராக நான் போ ராடி இருக்கிறேன்.கருப்பர் ஆதிக்கத்துக்கு எதிராக நான் போராடியிருக்கிறேன்.
எல்லோரும் ஒற்றுமையாக வாழக்கூடிய,எல்லோருக்கும் சமமாக வாய்ப்பு கள் கிடைக்கக்கூடிய, ஜனநாயகப்பூர்வமான,சுதந்திரமான சமூகம் என்ற இலட் சியத் தையே நான் போற்றி வந்திருக்கிறேன். நான் அடைய நினைப்பது இந்த இலட்சியத்தைத்தான். நான் வாழ நினைப்பது இந்த இலட்சியத்துக் காகத்தான். தேவை என்றால் என் உயிரையும் துறக்க நினைப்பது இந்த இலட்சியத்துக் கா கத்தான்.”
தேசத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு தென்னாப்பிரிக்கா உச்ச நீதிமன்றத்தில்
நிறுத்தப்பட்டபோது, 1964 ஏப்ரல் 23 ஆம் நாள் மேற்கண்டவாறு முழங்கினார் நெல்சன் மண்டேலா.