Showing posts with label தருமபுரி. Show all posts
Showing posts with label தருமபுரி. Show all posts

Saturday, August 10, 2013

காதல் மரணிப்பதில்லை!

காதலர்கள் மரணித்தாலும் காதல் மரணிப்பதில்லை!

முன்னயிட்ட தீ முப்புறத்திலே
பின்னயிட்ட தீ தென்னிலங்கையிலே
அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே
நானும் இட்ட தீ மூள்க மூள்கவே

என்று நாட்டுரிமை காக்கும் போர்க் களத்தில், இந்திய விடுதலை வேள்வியில் நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க தன்சுவாசத்தை தந்து வெள்ளை ஏகாதிபத்தி யத்தை திகிலுறச் செய்த உலகத்தின் முதல் மனித வெடி குண்டு சுந்தரலிங்கம் (வீரபாண்டிய கட்டபொம்மன்), குயிலி (வேலு நாச்சியார்) தாழ்த்தப்பட்ட பட்டிய லினத்தவர்கள்.

Monday, August 5, 2013

காதலுக்கு தீண்டாமை வைத்த தீ !

தர்மபுரி மாவட்டம், நத்தம் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த இளங்கோவன் - அம்சவேணி இவர்களின் மகன் கல்லூரி மாணவன் இளவரசன். செல்லங் கொட்டாய் கிராமம் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த நாகராஜ் - தேன்மொழி இவர்களின் மகள் திவ்யா, செவிலியர் கல்லூரியில் பயிலும் மாணவி. இரு வரும் கல்லூரிக்கு செல்லும் வழியில் ஒருவரை ஒருவர் சந்தித்து பழகி வந்த னர், சந்திப்பு நட்பாக,நட்பு காதலாக மாறியது. இதன் விளைவு இருவரும் வெவ் வேறு சாதிகளை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம் பியது. இதனால் காதல் ஜோடிகள் இருவரும் சாதிய சமுதாய கட்டமைப் பை உடைத்து சுதந்திர பறவைகளாக பறக்க எண்ணி 9.10.2012 அன்று வீட்டை
விட்டு வெளியேறி 10.10.2012 அன்று கோவிலில் தாலிகட்டி திருமணம் செய்து
கொள்கிறார்கள்.

Friday, July 5, 2013

இளவரசனின் துயர மரணம்

இளவரசனின் துயர மரணம், கடும் அதிர்ச்சி தருகிறது!
வைகோ அறிக்கை! 


தருமபுரி மாவட்டம் நத்தம் காலனியைச் சேர்ந்த இளைஞனான இளவரசன் இரயில்வே பாதைக்கு அருகில் உயிரற்ற சடலமாக கிடந்தார் என்ற செய்தி தாங்க முடியாத அதிர்ச்சியைத் தருகிறது.

வாலிப மனங்களில் காதல் உணர்வுகள் மலர்வதும், ஒரு இளைஞனும் இள நங்கையும், ஒருவரையொருவர் நேசிப்பதும், திருமண வாழ்வை அமைத்துக் கொள்வதும், மனிதகுல வாழ்க்கைக்கு எழில் கூட்டும் நிலைப்பாடு ஆகும்.