Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Friday, August 16, 2013

காதலும் வீரமும் அகமும் புறமும்!

காதல் ஒழிக

ரோமை தலைநகராகக் கொண்ட இத்தாலி நாட்டிற்கு சிந்து நதியும் கங்கை நதி யும் பாய்ந்தோடும் ஒரு கலாச்சார நாட்டில் இருபதாம் நூற்றாண்டின் அதிகார பீடத்தை அலங்கரித்த செல்வச்செருக்குள்ள வீட்டுப் பிள்ளை மேல்படிப்பிற் காக இத்தாலி செல்கிறான்.ஆகாயத்தில் எல்லையில்லாமல்பறந்திட வேண் டும் என்று விமானியாக பயிற்சி எடுத்தவர் இத்தாலி நாட்டின்ஓட்டலில் அங் கிருந்த பணிப் பெண்ணிடம் இதயத்தைப் பறிகொடுக் கிறான். காதல் கனிந்து திருமணம் கை கூடியது.

இத்தாலி பணிப்பெண் அவன் நாட்டிற்கு மணப் பெண்ணாக வந்த அதிர்ஷ்டம்
ஆட்சி பீடத்திலிருந்த அவனது அன்னைக்கு தொலைநோக்கு சமூக பார்வை ஆளுமை சர்வதேச நாடுகளின் மதிக்கத்தக்க தலைவராக உயர்ந்து இருந்தார். தீவு நாட்டில் உரிமை மறுக்கப்படும் தொன்மையான இனமக்களுக்கு உதவு வதற்கு அரசியல் நடவடிக்கை பயனற்றுப் போனதால் அவ்வின இளைஞர் களைத் தேர்வு செய்து போர் யுக்திகளும் ஆயுதப் பயிற்சியும் தந்து இராணுவ
உதவிகளையும் செய்து அவர்களின் இழந்த உரிமைகளைப் பெறுகின்ற சூழலை உருவாக்கித் தந்தார்.

Monday, August 12, 2013

காதல்: புரியாதவர்களுக்கு பொழுதுபோக்கு!

தாஜ்மகால்

முகலாய மன்னர் ஷாஜகானின் அந்தப்புரத்தை அலங்கரித்த மூன்றாவது மனைவி தான் மும்தாஜ்.இவர் 14 பிள்ளைகளுக்கு தாய். 14-ஆவதாக பெண் பிள் ளையின் பிரசவத்தின் போது நோய்வாய்ப்பட்டு மரணம் அடைந்தார். மும் தாஜ் மீது வைத்திருந்த அன்பின் காரணமாக ஷாஜகானின் கறுத்த தலைமுடி முழு
வெள்ளை நிறத்திற்கு மாறியதாக கூறுவார்கள்.

ஷாஜகானின் மனம் கவர்ந்த மும்தாஜின் மரணத்திற்குப் பின் அவர் நினை வாக தாஜ்மகால் கட்ட முயற்சிகள் மேற்கொண்டு, புகழ்பெற்ற பொறியாளரை அழைத்து, தாஜ் மகாலுக்கான வரைபடம் தயாரிக்கச் சொல்கின்றார். தன் திறமைகள் அனைத்தையும் பயன்படுத்தி எவ்வளவோ சிறப்பான வரைபடங் கள் வரைந்தும் மன்னர் ஷாஜகான் திருப்தி பெறாமல் கோபமடைகிறார். இதை
ஒவ்வொரு நாளும் பொறியாளர் தன் காதல் மனைவியிடம் சொல்லி வருத்தப் படுகின்றார். பொறியாளரின் மனைவி ஆறுதல் கூறுகிறாள்.

Saturday, August 10, 2013

காதல் மரணிப்பதில்லை!

காதலர்கள் மரணித்தாலும் காதல் மரணிப்பதில்லை!

முன்னயிட்ட தீ முப்புறத்திலே
பின்னயிட்ட தீ தென்னிலங்கையிலே
அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே
நானும் இட்ட தீ மூள்க மூள்கவே

என்று நாட்டுரிமை காக்கும் போர்க் களத்தில், இந்திய விடுதலை வேள்வியில் நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க தன்சுவாசத்தை தந்து வெள்ளை ஏகாதிபத்தி யத்தை திகிலுறச் செய்த உலகத்தின் முதல் மனித வெடி குண்டு சுந்தரலிங்கம் (வீரபாண்டிய கட்டபொம்மன்), குயிலி (வேலு நாச்சியார்) தாழ்த்தப்பட்ட பட்டிய லினத்தவர்கள்.

Monday, August 5, 2013

காதலுக்கு தீண்டாமை வைத்த தீ !

தர்மபுரி மாவட்டம், நத்தம் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த இளங்கோவன் - அம்சவேணி இவர்களின் மகன் கல்லூரி மாணவன் இளவரசன். செல்லங் கொட்டாய் கிராமம் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த நாகராஜ் - தேன்மொழி இவர்களின் மகள் திவ்யா, செவிலியர் கல்லூரியில் பயிலும் மாணவி. இரு வரும் கல்லூரிக்கு செல்லும் வழியில் ஒருவரை ஒருவர் சந்தித்து பழகி வந்த னர், சந்திப்பு நட்பாக,நட்பு காதலாக மாறியது. இதன் விளைவு இருவரும் வெவ் வேறு சாதிகளை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம் பியது. இதனால் காதல் ஜோடிகள் இருவரும் சாதிய சமுதாய கட்டமைப் பை உடைத்து சுதந்திர பறவைகளாக பறக்க எண்ணி 9.10.2012 அன்று வீட்டை
விட்டு வெளியேறி 10.10.2012 அன்று கோவிலில் தாலிகட்டி திருமணம் செய்து
கொள்கிறார்கள்.