அரசின் ஆதரவுடன் நிலத்தடி நீர் கொள்ளை...
1000 லிட்டர் தண்ணீரை 18 ரூபாய்க்கு வாங்கி
ஒரு லிட்டர் 20 ரூபாய்க்கு விற்பதற்குப் பெயர் என்ன?
நம் தமிழ்நாடு தண்ணீர்ப் பற்றாக்குறை மாநிலமாக ஆனதற்கு மாநிலங்களின்
எல்லைக்கோடு, வரையறுப்பதில் ஏற்பட்ட முறைகேடுகள்தான் முதல் காரண மாகும்.
டெல்லி, கொல்கத்தா, மும்பை,சென்னை முதலிய இடங்களுக்கு இடையி
லான நாடுகளைப் பல அரசர்கள், சிற்றரசர்கள் ஆண்டு வந்தனர். அதில் இன்று (தெலுங்கானா பகுதியான) நிஜாம் என்ற மன்னர் ஆண்ட பகுதிக்குத் தென் கிழக் கேயும், திருவிதாங்கூர்-கொச்சி மன்னர் ஆண்ட பகுதிக்குக் கிழக்கேயும் பெரும் பகுதியில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மன்னர்கள் யாரும் ஆட்சி செய்ய வில்லை.