Showing posts with label தண்ணீர்.. Show all posts
Showing posts with label தண்ணீர்.. Show all posts

Sunday, June 30, 2013

தண்ணீர்..தண்ணீர்.. தண்ணீர்.. பகுதி -4

அரசின் ஆதரவுடன் நிலத்தடி நீர் கொள்ளை...

1000 லிட்டர் தண்ணீரை 18 ரூபாய்க்கு வாங்கி
ஒரு லிட்டர் 20 ரூபாய்க்கு விற்பதற்குப் பெயர் என்ன?

நம் தமிழ்நாடு தண்ணீர்ப் பற்றாக்குறை மாநிலமாக ஆனதற்கு மாநிலங்களின்
எல்லைக்கோடு, வரையறுப்பதில் ஏற்பட்ட முறைகேடுகள்தான் முதல் காரண மாகும்.

டெல்லி, கொல்கத்தா, மும்பை,சென்னை முதலிய இடங்களுக்கு இடையி
லான நாடுகளைப் பல அரசர்கள், சிற்றரசர்கள் ஆண்டு வந்தனர். அதில் இன்று (தெலுங்கானா பகுதியான) நிஜாம் என்ற மன்னர் ஆண்ட பகுதிக்குத் தென் கிழக் கேயும், திருவிதாங்கூர்-கொச்சி மன்னர் ஆண்ட பகுதிக்குக் கிழக்கேயும் பெரும் பகுதியில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மன்னர்கள் யாரும் ஆட்சி செய்ய வில்லை.

Sunday, June 23, 2013

தண்ணீர்..தண்ணீர்.. தண்ணீர்.. பகுதி -3

தண்ணீர் வியாபாரத்தில் கிடைக்கும் இலாபம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பெரும் கொள்ளையாகும்.விவசாயிகளின் நிலத்தில் உள்ள கிணறுகளைக்கூட நீர்க் கொள்ளை நிறுவனங்கள் விட்டு வைக்க வில்லை.

ஆறுகளைத் தேசியமயமாக்க வேண்டும்...
தனியார் வசமாக்குவது ஆபத்தான முடிவாகும்!

தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன.கட்சிகளின் அடிப்படை யில் மக்கள் மனம்போன போக்கில் சிதறிக்கிடக்கின்றனர். கொள்கை கோட் பா டுகள் சிறிதும் புரியாமலேயே கட்சித் தலைமையைப் போற்றுவது அறியாமை என்பதைவிட ஏதோ ஒருவிதமான எதிர்பார்ப்புகளால் ஆளும்கட்சித் தகுதி யுள் ளவர்களின் மீது துதி பாடித்திரிகின்றார்கள் என்பதே சரியான மதிப்பீடாகும்.

Tuesday, June 18, 2013

தண்ணீர்..தண்ணீர்.. தண்ணீர்.. பகுதி -2

தமிழகத்தைத் தவிக்கவிட இந்திய அரசின் திட்டமிட்ட சதி!

ஒருங்கிணைந்த சென்னை மாகாணமாக இருந்தபோது தண்ணீர் பற்றாக் குறை யில்லாமல் இருந்தது.1953 இல் ஆந்திரா தனிமாநிலமாகப்பிரிந்தது. 1956 இல் மாநிலங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. இதன் விளைவாகவே தமிழகம் தண்ணீரை இழக்க நேர்ந்தது.

அறிஞர் அண்ணா ஆசைப்பட்ட (தென்னாடு) திராவிட நாடு மட்டும் அமைந்தி ருக்குமானால், நீர்வளம், நிலவளம், தொழில்வளம், மனித வளம் ஆகிய அனைத்து வளங்களும் பொருந்திய நாடாக அமைந்திருக்கும்.

Tuesday, June 11, 2013

தமிழகத்தைத் தாக்கும் பேராபத்து...

தண்ணீர்..... தண்ணீர்..... தண்ணீர்!

தமிழகத்தைத் தாக்கும் பேராபத்து...

வைகோதான் காப்பாற்ற வேண்டும்!

“நீரின்றி அமையாது உலகு” என்பது வள்ளுவர் வாக்கு.

மாந்தர் இனம் உயிர்வாழ ஆதாரமாக இருப்பது தண்ணீர்.மனிதர்கள் மட்டுமல் ல, மண்ணில் தோன்றிய எல்லா உயிர் இனங்களும் செடி கொடிகளும், வன விலங்குகளும், பறவைகளும் உயிர் வாழ்வதற்குத் தண்ணீர் அவசியமாகும்.