Showing posts with label தடை. Show all posts
Showing posts with label தடை. Show all posts

Tuesday, June 4, 2013

விடுதலைப்புலிகள் மீதான தடையை உறுதி செய்த தீர்ப்பாயத்தின் ஆணையை இரத்து செய்திடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வைகோ ஆணித்தரமான வாதம்!

விடுதலைப்புலிகளைச் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ்
மத்திய அரசு தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து 2010 மே மாதத்தில் அறிவித்த ஆணையை உறுதி செய்வதற்கு அமைக்கப்பட்ட தீர்ப் பாயத்தின் தலைவர் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு விக்ரம்ஜித் சென் அவர்கள் முன்னிலையில், கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி விசாரணை நடந்தபோது, கழகப் பொதுச்செயலாளர் வைகோ நேரில் ஆஜராகி, தடையை
இரத்து செய்திட வேண்டுமென வாதிட்டதோடு, தன்னையும் அந்த விசாரணை யில் பங்கேற்க அனுமதிக்க வேண்டுமென மனுத் தாக்கல் செய்தார்.

நீதிபதி விக்ரம்ஜித் சென் 25.09.2010-இல் வெளியிட்ட ஆணையில், வைகோவின் கோரிக்கை மனுவை ஏற்க முடியாது என தள்ளுபடி செய்தார்.எனினும், அரசுத் தரப்புக்கு எதிரான கருத்துகளைத் தீர்ப்பாயத்தின் முன் எடுத்து வைக்க தகுதி
உடையவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பதை மறுப்பதற்கு இல்லை என் றும் அந்த ஆணையில் குறிப்பிட்டார்.