Showing posts with label குற்றப் பரம்பரைச் சட்டம். Show all posts
Showing posts with label குற்றப் பரம்பரைச் சட்டம். Show all posts

Saturday, April 13, 2013

உசிலம்பட்டி-‘ஈகியர் நினைவு நாள் கூட்டத்தில் வைகோ’

பெருங்காமநல்லூரை, சிவகங்கைச் சீமையை,
தமிழ் மண்ணின் வீரத்தைப் பேசுவோம்!-வைகோ 

பெருங்காமநல்லூர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம், தமிழ்த்தேசிய விடு தலை இயக்கம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் இயக்கம் சார்பில், 3.4.2013 அன்று உசிலம்பட்டியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மதிமுக பொதுச்
செயலாளர் வைகோ அவர்கள் சிறப்பு உரையாற்றினார். அவரது உரையில் இருந்து...

கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே குகைவாழ் ஒரு புலியே உயர்குணமேவிய தமிழா

என்ற பாவேந்தரின் வீர வரிகளுக்கு இலக்கணம் தீட்டிய தியாகபூமியாம் பெருங் காமநல்லூரில், பிரிட்டிஷ் வல்லாதிக்கத்தின் துப்பாக்கிக் குண்டு   களுக்குத் தங்கள் மார்பு காட்டி செங்குருதி சிந்தி மடிந்த,காளப்பன்பட்டி நடையநேரி பெரிய
மாயத்தேவரின் மகள் மாயக்காள் உள்ளிட்ட 16 மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகின்ற, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கமும், தமிழ்த்தேசிய மக்கள் இயக்கமும் இணைந்து நடத்துகின்ற இந்தக் கூட்டத்தின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.