Showing posts with label கல்பாக்கம். Show all posts
Showing posts with label கல்பாக்கம். Show all posts

Wednesday, April 17, 2013

தமிழக மக்கள் ,என்ன ,பரிசோதனைப் பொருட்களா ? - வைகோ

கல்பாக்கம் அணுஉலை விபத்து ஒரு அபாய அறிவிப்பு

தமிழக அரசு நிபுணர் குழுவை அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும் அப்பகுதிவாழ் மக்களைக் காக்க வேண்டும்

வைகோ அறிக்கை

கல்பாக்கம் அணுமின் நிலையம் 35 ஆண்டுகள் பழமையானது. இந்த அணு உலையில் இருந்து குறைந்த அளவே மின்உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, பராமரிப்புப் பணிகள் நடைபெறும்.

கடந்த மார்ச் மாதம் 3 ஆம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, பராமரிப்புப் பணி கள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் (15.04.2013) காலை ஏழு மணி அளவில் மின் உற்பத்தி தொடங்குவதற்காக, அணு உலையை இயக்கிய சற்று நேரத்தில் மின்மாற்றி பயங்கர சத்தத்துடன் வெடித் துச் சிதறியது. உடனடியாக அணுஉலையின் செயல்பாடுகள் நிறுத்தப் பட்டு, தீ அணைப்பு வீரர்களும் விஞ்ஞானிகளும் விரைந்து சென்று, இரண்டு மணி நேரத் துக்கும் மேலாகப் போராடி, தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து இருக்கின்றனர்.