Showing posts with label இளைஞரணி. Show all posts
Showing posts with label இளைஞரணி. Show all posts

Wednesday, June 12, 2013

மூடப்பட்ட பள்ளிகளில் பயின்ற குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும்-மதிமுக இளைஞரணி கோரிக்கை

மதிமுக மாநில இளைஞரணிச் செயலர் வே.ஈஸ்வரன் மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய கடித விவரம்:

கோவையில் உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்ட பள்ளிகளை மூட மாவட்டக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதை ஏப்ரல் மாதத்தில் எடுத்திருந்தால் அனைத்து மாணவர்களும் வேறு பள்ளிகளில் சேர்ந்திருப்பார்கள்.

ஆனால் பள்ளி திறக்கும் நாளில் சீருடையோடு மகிழ்ச்சியோடு சென்ற குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும் போது பிஞ்சு உள்ளங்களின் மனதில் ஏற்பட்ட மன உளைச்சலைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. மூடப்பட்ட பள்ளிகள் ஏழை மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் தான்; வேறு பள்ளிகளில் சேர்க்கவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

Sunday, June 2, 2013

மாணவர்களின் பிரதிநிதிகளையும் பல்கலைக் கழக நிர்வாகத்துக்குள் உறுப்பினராகக் கொண்டு வர வேண்டும்.-மதிமுக மாநில இளைஞரணிச் செயலர்

பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் துணைவேந்தர்கள் செயல் படக் கூடாது என்று மதிமுக மாநில இளைஞரணிச் செயலர் வே.ஈஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: உலகின் தலை சிறந்த பல்கலைக் கழகங்களில் முதல் 200 இடத்துக்குள் இந்தியாவின் எந்த ஒரு பல்கலைக் கழகமும் இல்லை என்பது வருத்தமளிப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தியாவில் உள்ள பல்கலைக் கழகங்களில் நடக் கும் ஊழல்,நிர்வாகச் சீர்கேடுகளைக் களையாமல் அவர் கனவு காண்பது வீண்.

Tuesday, April 9, 2013

தேயிலை தொழிலாளர் தினக் கூலி உயர்த்து - மதிமுக

தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு தினக் கூலி ரூ.300 வழங்கிட மதிமுக சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வால்பாறையில் நடைபெற்ற மதிமுக பொதுக்கூட்டத்தில் மாநில இளைஞரணிச்செயலாளர் வே.ஈஸ்வரன் பேசினார்.

வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் மதிமுக பொதுக்கூட்டம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில் வால்பாறை ஒன்றியச்செயலாளர் எஸ்.கல்யாணி தலைமை வகித்தார். அவைத் தலைவர் ஏ.டி.செல்வின், பொருளாளர் அம்பிகை சுப்பையா முன்னிலை வகித்தனர். இதில் மாநில இளைஞரணிச் செயலாளர் வே.ஈஸ்வரன் பேசியது:

தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு தினக் கூலி ரூ.300 வழங்கிட மதிமுக சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். வனவிலங்கு அச்சுறுத்தல் அதிகம் உள்ள வால்பாறை எஸ்டேட் பகுதியில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.