Showing posts with label பல்கலைக் கழகங்கள். Show all posts
Showing posts with label பல்கலைக் கழகங்கள். Show all posts

Sunday, June 2, 2013

மாணவர்களின் பிரதிநிதிகளையும் பல்கலைக் கழக நிர்வாகத்துக்குள் உறுப்பினராகக் கொண்டு வர வேண்டும்.-மதிமுக மாநில இளைஞரணிச் செயலர்

பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் துணைவேந்தர்கள் செயல் படக் கூடாது என்று மதிமுக மாநில இளைஞரணிச் செயலர் வே.ஈஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: உலகின் தலை சிறந்த பல்கலைக் கழகங்களில் முதல் 200 இடத்துக்குள் இந்தியாவின் எந்த ஒரு பல்கலைக் கழகமும் இல்லை என்பது வருத்தமளிப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தியாவில் உள்ள பல்கலைக் கழகங்களில் நடக் கும் ஊழல்,நிர்வாகச் சீர்கேடுகளைக் களையாமல் அவர் கனவு காண்பது வீண்.