Showing posts with label மாற்றுத் திறனாளிகள். Show all posts
Showing posts with label மாற்றுத் திறனாளிகள். Show all posts

Monday, December 2, 2013

டிசம்பர் 3 உலக மாற்றுத் திறனாளிகள் தினம் -வைகோ வாழ்த்து

டிசம்பர் 3 உலக மாற்றுத் திறனாளிகள் தினம் #வைகோ வாழ்த்து

செங்காந்தள்தமலர் பூத்துக் குலுங்கும் கார்த்திகை மாதம் 17ம் நாள் 3.12.2013 உலக மாற்றுத் திறனாளிகள் தினம். கார் இருள் விலகி, விடியலைத் தரிசித்து சமூகத்தில் சகமனிதர்களைப் போன்று சுயமாகவும், சுயமரியாதையோடும் வாழ்க்கை அமைந்திட, மனித நேயத்துடன் நாம் இணைந்து பணியாற்றினால் சிறிய செயல்கள் கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மட்டும் பல்வேறு உடல் உறுப்புக் குறைபாடுகளுடன் கூடிய சுமார் 20 இருபது லட்சம் மாற்றுத் திறனாளிகள் இருக்கின்றார்கள்.

நீர், நிலம், காற்று நஞ்சாகி சுற்றுச்சூழல் மாசுபட்டு, பிறவி ஊனம் உருவாக அரசுகளும் ஒரு காரணமாக அமைகின்றது. உலக பொது மன்றம் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளைச் சட்டமாக்கி நடைமுறைப்படுத்த உலக நாடு களைப் பணித்தது.