Showing posts with label பெரியார் தாசன். Show all posts
Showing posts with label பெரியார் தாசன். Show all posts

Saturday, August 24, 2013

வாராது வந்த மாமணியே

வாராது வந்த மாமணியை,
கருத்துக் கருவூலக் களஞ்சியத்தை,
இயற்கை பறித்துச் சென்றதே!

அப்துல்லாஹ் பெரியார்தாசன் மறைவு; #வைகோ இரங்கல் உரை

திராவிட இயக்கம் ஈடு இணையற்ற கருத்துக்கருவூலக் களஞ்சியத்தை இழந்து விட்டது; 

தமிழ் இனம் எழுத்தாலும், பேச்சாலும், தனக்கு அரண் அமைத்துத் தருகின்ற வலிய  படைக்கருவியை இழந்து விட்டது;

நட்புச் சுற்றம் நெஞ்சால் உயர்வாக நேசித்த ஒரு நண்பனை இழந்து விட்டது;

Monday, August 19, 2013

இதயத்தில் விழுந்த இடி

இதயத்தில் விழுந்த இடி அப்துல்லாஹ் பெரியார்தாசன் மறைவு

#வைகோ இரங்கல்

திராவிட இயக்கத்தின் கருத்துக் களஞ்சியக் கருவூலமான, என் ஆருயிர்ச் சகோதரர் அப்துல்லாஹ் பெரியார்தாசன், என்னையும், இயக்கத்தோழர் களை யும் கண்ணீரில் துடிக்க வைத்து மறைந்து விட்டார்.

தந்தை பெரியார் அவர்களை, மாணவப் பருவத்தில் தலைவராக ஏற்றுக் கொண்டு, சுயமரியாதை வீரராக, பகுத்தறிவு நெறியை மக்களிடம் பரப்ப, எழுத்தாலும், பேச்சாலும், அவர் ஆற்றிய பணிகள், ஈடு இணையற்றவை ஆகும்.