Showing posts with label பாரதிதாசன். Show all posts
Showing posts with label பாரதிதாசன். Show all posts

Sunday, August 4, 2013

பாரதியும் பாவேந்தரும் -பகுதி 2

மனித நேயம் மிக்கவன். தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில், ஜெகத் தினை  அழித்திடுவோம் என்றான். அனைத்து இயற்கையையும் நேசித்தான்.
சாதி என்ற உணர்வுக்கு அப்பாற்பட்டவன். அவன் பிறந்தது பார்ப்பனர் குலம். ஆனால், இவன் பிராமண சாதியில் பிறந்து, பிராமண குலத்துக்கே கேடு செய்து விட்டான் என்று அவனைப் புறக்கணித்தார்கள். வாழ்நாளெல்லாம் இரு தரப்பிலும் தீண்டாமைக்கு ஆளானவன் முண்டாசுக் கவிஞன்.அந்தக் குறை யைப் போக்குவதற்குத்தான், எங்கள் திராவிடத்தின் தேசியக் கவிஞன் கனக
சுப்புரத்தினம், பாரதி மறைந்ததற்குப் பிறகுதான், தன் பெயரை ‘கே.எஸ். பாரதி தாசன்’ என்று முதன்முதலாகக் குறிப்பிட்டு, பத்திரிகைக்கு எழுதி அனுப்பி னார். பாரதியின் உணர்வோடு தன்னுடைய கவிதைகளைப் படைத்தார். ‘ஒரு
மனிதன் தேவைக்கே இத்தேசம் உண்டென்றால்,அத்தேசம் ஒழிதல் நன்றாம்’ என்றார்.

Saturday, August 3, 2013

பாரதியும் பாவேந்தரும் -பகுதி 1

பாரதியும் பாவேந்தரும் ஊட்டியா வீரத்தை; 
மானத்தை இளைய தலைமுறை போற்றிட வேண்டும் !- #வைகோ 

சென்னை மணவழகர் மன்றம் முத்தமிழ் விழா அறக்கட்டளை மற்றும் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை சார்பில், மணவழகர் மன்றத்தின் 57 ஆம் ஆண்டு முத்தமிழ் விழாவும், டாக்டர் பா.சிவந்தி ஆதித்த னார் அவர்களின் உருவப் படத்திறப்பு விழாவும் ராஜா அண்ணாமலை மன்றத் தில் 12.7.2013 அன்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் “பாட்டுக்கு ஒரு புலவ னும் பாவேந்தரும்” என்ற தலைப்பில் கழகப்பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சிறப்பு வைகோ உரை ஆற்றினார்.