Showing posts with label நாமக்கல். Show all posts
Showing posts with label நாமக்கல். Show all posts

Monday, August 19, 2013

நாமக்கல் மாவட்ட நிதி அளிப்புக் கூட்டம்

மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் குரல், நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்!

திருச்செங்கோட்டில் கழக வளர்ச்சி நிதி - தேர்தல் நிதி அளிப்புக் கூட்டத்தில் #வைகோ

நாமக்கல் மாவட்டக் கழகம் சார்பில், 12.8.2013 அன்று திருச்செங்கோட்டில், நிதி அளிப்புக் கூட்டம் நடைபெற்றது.நிதியினைப்பெற்றுக் கொண்டு கழகப் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரையில் இருந்து....

சிலப்பதிகாரத்தைத் தந்த இளங்கோ அடிகளால் போற்றப்பட்ட, காவிரிப்பூம்
பட்டினத்துக் கண்ணகிப் பெருந்தேவி,குன்றக் குரவர்கள் சந்திக்க, விண்ணுக் குச் செல்வதற்கு விடை கொடுத்து அனுப்பிய இடம் என்று, தமிழகத்தின் வர லாறும், இலக்கியங்களும் போற்றுகின்ற, ‘திருச்செங்குன்றம்’ என அழைக்கப் படும்,திருச்செங்கோடு திருநகரில், நாமக்கல் மாவட்டக் கழகத்தின் சார்பில் தேர்தல் நிதி, கழக வளர்ச்சி நிதி வழங்குகின்ற இனிய நிகழ்வில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வு அடைகிறேன்.

Tuesday, August 13, 2013

திருச்செங்கோட்டில் வைகோ

திருச்செங்கோட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சியின் தேர்தல் நிதியளிப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியது:

சில நேரங்களில் எதிர்பார்ப்பது நடப்பதில்லை. சில சமயங்களில் எதிர்பாரா தது நடந்து விடுகிறது. இவ்வளவு நிதி நான் எதிர்பாராதது. பொதுமக்களிடம் இருந்து திரட்டப்பட்ட இந்த நிதியை நேர்மைக்கும், பொது வாழ்வில் தூய்மைக் கும் நமக்குக் கிடைத்த அங்கீகாரம் என்றே கருதலாம்.