Showing posts with label தொண்டர்கள். Show all posts
Showing posts with label தொண்டர்கள். Show all posts

Tuesday, June 25, 2013

தொண்டர்களுக்கு வைகோ கடிதம்

இமைப்பொழுதும் நீங்காது
என் இதயத்துடிப்போடும்
இரத்தச் சுழற்சியோடும்
கலந்துவிட்ட கண்ணின்மணிகளே!

இயக்கத்தின் இருபதாம் அகவையில், வெற்றியின் வெளிச்சம் பிரகாசிக்கப் போகிறது.கழக வளர்ச்சி நிதி -தேர்தல் நிதி திரட்டிட வேண்டிய அவசியம் வந்து விட்டதை விளக்கி, ‘இலட்சியச் சிகரம் நோக்கி இருபது ஆண்டுகள்’என்ற கடிதத்தில், ஆறு வாரங்களுக்கு முன்பே கண்ணின் மணிகளே உங்களுக்குக் கடிதம் தீட்டி இருந்தேன்.

நமது இயக்கத்தின் சார்பில் நிதி கேட்டால், எந்த இடத்திலும், எவரும் முகம் கோணாமல் பரிவோடு தங்களால் முடிந்ததைத் தருகிறார்கள். திட்டமிட்டு முறையாக, தமிழகம் எங்கும் அனைத்து மாவட்டங்களில் நிதி திரட்டும் பணி கள் நிறைவு அடையும் நிலையில் உள்ளது.