Showing posts with label தென் சென்னை. Show all posts
Showing posts with label தென் சென்னை. Show all posts

Monday, September 16, 2013

மணிமேகலையா சோனியா காந்தி?

மணிமேகலையா சோனியாகாந்தி?காங்கிரஸ் அரசைத்தூக்கி எறிவோம்!
தென்சென்னை மாவட்ட நிதி அளிப்புக் கூட்டத்தில் #வைகோ

தென்சென்னை மாவட்டக்கழகத்தின் சார்பில் 5.9.2013 அன்று சைதாப்பேட்டை யில் நிதியளிப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கழக வளர்ச்சி நிதி - தேர்தல் நிதியினைப் பெற்றுக் கொண்டு, பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற் றிய உரையில் இருந்து....

இனி இழப்பதற்கு எதுவும் இல்லை; காணப் போவது பொன் உலகம் என்ற நிறைந்த நம்பிக்கையோடு, இருபதாவது ஆண்டில் தனது அரசியல் பயணத் தை நடத்திக் கொண்டு இருக்கின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தின், தேர்தல் நிதி, கழக வளர்ச்சி நிதி வழங்குதல், செப்டெம்பர் 15 இல் நடை பெற இருக்கின்ற விருதுநகர் மாநாட்டுக்கு, தலைநகர் சென்னையில் நுழைவா யில் அமைக்கின்ற இலக்கோடு நடைபெறுகின்ற, தென்சென்னை மாவட்ட நிதி அளிப்பு விழா மாபெரும் பொதுக் கூட்டத்தில் உங்களை எல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.