Showing posts with label திட்டக்குழு. Show all posts
Showing posts with label திட்டக்குழு. Show all posts

Saturday, August 3, 2013

ஏழை படும் பாடு!

சங்கொலி தலையங்கம்

இந்திய அரசின் திட்டக்குழு ஜூலை 23 ஆம் தேதி நாட்டில் உள்ள ஏழைகள் குறித்த தனது மேதாவித்தனமான அறிக்கையை வெளியிட்டிருக்கின்றது. திட் டக்குழுவினால், நியமிக்கப்பட்ட டெண்டுல்கர் குழுவின் அறிக்கைதான் இது என்றாலும், இதுவே திட்டக்குழுவின் அசல் அறிக்கையாக பின்னர் ஏற்கப் படும் அபாயம் இருக்கின்றது.

ஏனெனில், 2011 இல் உச்ச நீதிமன்றத்தில், ஏழை மக்கள், வறுமைக் கோட்டிற்கு
கீழே இருப்பவர்கள் எப்படி தீர்மானிக்கப் படுகிறார்கள் என்று திட்டக்குழு
அறிக்கை தாக்கல் செய்தது. அதில் இந்தியாவின் கிராமப்புறத்தில் வயது வந்த
ஒருவரின் வருமானம் தினசரி ரூ.26 என்றால், அவர் வறுமைக் கோட்டில் வாழ் கிறார் என்றும், நகர்புறத்தில் உள்ள ஒருவரின் வருமானம் தினசரி ரூ.32 ஆக
இருப்பின், அவர் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்கிறார் என்றும் தெரிவித்து
இருந்தது.