Showing posts with label சிறை. Show all posts
Showing posts with label சிறை. Show all posts

Monday, September 2, 2013

சிறைவாசிகளை விடுதலை செய்க!

பேரறிஞர் அண்ணா 105-ஆவது பிறந்த நாளையொட்டி
சிறைவாசிகளை விடுதலை செய்க!

#வைகோ கோரிக்கை

ஆயுள் தண்டனை அடைந்தோர், பத்து ஆண்டுகள் தண்டிக்கப்பட்டோர், சில குற்றப் பிரிவுகளில் தண்டனை பெற்றதைக் காரணம் காட்டி, 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள் கடந்தும் சிறையில் இருக்கின்றனர்.

வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒரு சிறைவாசி, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தால், பரோல் விடுப்பு கிடையாது என்பதும், நியாயப்படுத்த முடியாத மனிதாபிமானம் அற்ற நடவடிக்கை ஆகும். 

Wednesday, August 28, 2013

எனக்கு சிறை பிடிக்கும் -வைகோ

எனக்கு சிறை பிடிக்கும் - #வைகோ

சொந்தக் கிராமமான கலிங்கப்பட்டிக்குப் போவதைப்போலவே சிரித்துக் கொண்டே செல்லும் இன்னோர் இடம்... சிறைச்சாலைகள். இதுவரை 28 தடவைகள் -சுமார் நான்காண்டு காலம், மாநிலத்தில் இருக்கும் பெரும்பாலான
மத்தியச் சிறைகளில் அவரது மூச்சுக்காற்று சுற்றி வந்திருக்கிறது. நிகழ்காலத் தலைவர்களில் அதிக காலம் உள்ளே இருந்த சிறைப்பறவை!