Showing posts with label காமராசர். Show all posts
Showing posts with label காமராசர். Show all posts

Saturday, August 17, 2013

பேரறிஞரும் பெருந்தலைவரும்

பேரறிஞர் அண்ணாவும், பெருந்தலைவர் காமராசரும்!

“பொன்னில்லான் பொருளில்லான்
புகழின்றி வசையில்லான்
இல்லாளும் இல்லான்
இல்லையென்னும் ஏக்கமில்லான்

என்று பண்ணரசன் கண்ணதாசனால் பாடப் பெற்றவர் பெருந்தலைவர் காமராசர்.

சாத்தூர் சட்டமன்ற உறுப்பினராக,விருதுநகர் நகர சபை உறுப்பினராக, நகர் மன்றத் தலைவராக, இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக, ஸ்ரீவில் லிப்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினராக, தமிழக முதலமைச்சராக,குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினராக,திரும்பவும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினராக,இரண் டாவதாக,மூன்றாவதாக தமிழகத்தின் முதலமைச் சராகவும், நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளராகவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் பார்லிமெண்டரி போர்டு உறுப்பினராகவும், அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்தவர்
பெருந்தலைவர் காமராசர்.