திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவராய் இருந்த சோழவந்தான் தா.ஆவ டையப்பன், தாயாரின் சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் ஒருபந்தூரில் 18.09.1913 இல் பிறந்தார்.இவரது குடும்பங்களைச் சார்ந்தவர்களை வளையப் பட்டி ஜமீன் குடும்பத்தினர் எனக் குறிப்பிடுவர்.
சோழவந்தானில் கல்வி பயின்ற பின், பள்ளி இறுதி வகுப்பை மதுரை ஐக்கிய
கிருஸ்தவ பள்ளியில் பயின்றார். தேர்வு பெறாத நிலையில் கல்வி முடிவுக்கு
வந்தது. எனினும் தங்கு தடையின்றி ஆங்கிலத்தில் உரையாடும் ஆற்றலைப்
பெற்றிருந்தார்.
1935 இல் அத்தைமகள் இரத்தினத்தை திருமணம் செய்து கொண்டார். குடும்ப
விளக்காய் வாழ்வதற்கு இல்லத்தில் இனிய துணையாய் விளங்கிய மனைவி
குறுகிய காலத்திலேயே அகால மரணமடைந்தார். இத்துயர நிகழ்ச்சி குடும்பத் தில் பெரும் அதிர்ச்சியையும் துக்கத்தையும் ஏற்படுத்தியது.ஆவடையப்பன் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டார். மூன்றாண்டுகள் மறுமணம் செய்து கொள்ளாது இருந்தார்.பின்னர் 1939ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் நடை பெற்றது.