Showing posts with label சீனா. Show all posts
Showing posts with label சீனா. Show all posts

Tuesday, July 16, 2013

சீனம் சிவந்தது ஏன்? - 4

வரலாறு எழுப்பும் கேள்வி 

1962 அக்டோபர் 20 ஆம் தேதி அதிகாலை சீனாவின் மக்கள் விடுதலைப் படை (Peoples Liberation Army) எல்லை முழுவதிலும் தாக்குதலை ஆரம்பித்தது. தக்லா முகட்டிற்கு கீழ் இந்தியப் படை திடீர் தாக்குதலுக்குள்ளாகியது. மிகத் தீவிரமாக
வீரத்துடன் இந்தியப்படை போரிட்ட போதும், சீன இராணுவம் அதிக  எண்ணிக் கையில் படையெடுத்து வந்ததால், தாக்குப்பிடிக்க முடிய வில்லை.சீன இராணுவம் அரைமணி நேரத்தில் வேகமாக முன்னேறி தெற்கே ‘டவாங்கை’ கைப்பற்றி விட்டனர். மேலும் அக்சாய்சின்னின் சிப்சாப் பள்ளத்தாக்கிலும் பாங்காங் ஏரி பகுதியிலும், கிழக்கே சிக்கிமில் நதுலா கணவாயிலும், இந்தியப் படைகளை சீன இராணுவம் தாக்கியது.

Wednesday, July 10, 2013

சீனம் சிவந்தது ஏன்? - 3

1947 ஆகஸ்டு 15 இந்தியா விடுதலை பெற்றபோது, ஆங்கிலேயர்கள் தங்கள்
கட்டுப்பாட்டிலிருந்த இந்தியப் பகுதிகளின் வரைபடத்தைச் சுதந்திர அரசிடம் அளித்துச் சென்றனர்.இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் சார்பில் கடைசி கையொப்பமிட்ட மவுன்ட்பேட்டன் பிரிட்டனுக்கு அனுப்பிய அறிக்கையில் இணைக்கப் பட்டிருந்த இந்திய வரைபடத்தில் மக்மகான் எல்லைக் கோடு இந்தியாவின் எல்லையாகக் குறிக்கப் பட்டிருந்தது.மேற்கே அக்சாய்சின், கிழக்கே மக்மகான் கோடு - இவைதான் பிரிட்டிஷ் இந்தியா 1947-இல் உரு வாக்கி வைத்திருந்த இந்திய எல்லைகளாகும்.

இன்றைய மாநிலமான அருணாச்சலப் பிரதேசம் என்பதை வடகிழக்கு எல்லை
நிலப்பரப்பு (North East Frontier Area -NEFA) என்று ஆங்கிலேயர்கள் அதிகார பூர்வ மாக அழைத்து வந்தனர். இது போன்று வடமேற்கு எல்லை மாகாணம் (North West Frontier Province)  என்று மேற்கில் வடகோடி பிரதேசத்தை அழைத்தனர். ஒன்று ‘மாகாணம்’, மற்றொன்று ‘நிலப்பரப்பு’ என்று வேறுபடுத்திப் பார்க்கப் பட்டு இருந்தன.

Monday, July 1, 2013

சீனம் சிவந்தது ஏன்? - 2

இந்திய மண்ணை ஆக்கிரமித்த சீனா

1962 அக்டோபர் 20 இந்தியா மீது சீனா போர் தொடுத்து 50 ஆண்டுகள் உருண் டோடிவிட்டன. இந்திய-சீனப்போரின் விளைவாக, எல்லையில் மேற்கே காஷ் மீரின் அக்சாய்சின் பகுதியில் 43,180 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பகுதியை சீனா ஆக்கிரமித்துக் கொண்டது.

ஆனால், கிழக்கே அருணாசலப் பிரதேசத்தில், சீனாவுக்குச் சொந்தமான 90,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பகுதியை இந்தியா கைவசப்படுத்திக் கொண்ட தாக சீனா அக்கிரமமான குற்றச்சாட்டை முன்வைத்தது.

Thursday, June 27, 2013

சீனம் சிவந்தது ஏன்?

“ஆசிய கண்டத்தின் தீர்மான சக்திகளாக இந்தியாவும், சீனாவும் உள்ளன. சர்வ தேச வர்த்தகத்துக்கு மிகப்பெரிய உந்து சக்திகளாக இரு நாடுகளும் இருந்து வருகின்றன. இரு தரப்புக்கும் இடையே பிரச்சினைகள் இருக்கத்தான் செய் கின்றன. அவற்றை மூடி மறைத்திட விரும்பவில்லை.

கடந்த கால வரலாறு, இரு நாடுகளுக்கும் இடையே சில பிரச்சினைகளை விட் டுச் சென்றுள்ளது. ஆனாலும், அந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வு உள்ளது. இந்தி யாவும், சீனாவும் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள். இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை உள்ளது.அதற்குப் பேச்சுவார்த் தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதிலும்,இருவேறு கருத்துகளுக்குஇடம் இல்லை. இரு நாடுகளுக்கும் இடையே அமைதியையும் நல்லிணக்கத்தையும்
உருவாக்கி, ஒரு புதிய அத்தியாயம் தொடங்க வேண்டியது அவசியமான கட மையும் ஆகும்”.